மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்களைப் பெற முதல்வரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க இதற்கென தனியே ஒரு இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் பெற்றுக்கொண்டார். முதல்வர் மனுக்களை பெறுகிறார் என்ற தகவல் நேற்றே வெளியிடப்பட்டதை அடுத்து, இன்று காலை முதலே மக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்து பொதுமக்களின் மனுக்களை முதல்வர் நேரடியாக பெற்றுக்கொண்டார்.