முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,505 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,23,943ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 282, ஈரோட்டில் 187, தஞ்சாவூர் 185, சேலம் 162, சென்னை 160 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,502ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,59,223 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 31,218 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,39,113 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →