தமிழ்நாடு

தீவிர நடவடிக்கையால் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

DIN

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் பெருமளவில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் திங்கள்கிழமை பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில்,

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் பல இடங்களில் பெருமளவில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 2,715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 402 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்தில் 54 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT