முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து பெண் பலி

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் கிழக்கு 7 ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன். இவரது மகள் பரமேஸ்வரி (23). பொறியியல் பட்டதாரியான பரமேஸ்வரி தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை வாட்டர் கீட்டர் உற்பத்தி செய்யும் ஆலையில் தொழில்நுட்ப  பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பரமேஸ்வரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி காரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது தம்பி சுந்தர் பலத்தகாயமடைந்தார். அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.