காலமானார்: எஸ்.மாசானம்
நாமக்கல் மாவட்டம் தினமணி செய்தியாளர் மாரியப்பன் தந்தை எஸ். மாசானம் காலமானார். அவருக்கு வயது 79.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:51 AM
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த எஸ்.மாசானம் (79), உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு, மனைவி பிரமு அம்மாள், தினமணி நாளிதழின் நாமக்கல் மாவட்ட நிருபராகப் பணியாற்றும் மாரியப்பன் உள்பட ஐந்து மகன்கள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை மின்மயானத்தில் நடைபெற்றன.