தமிழ்நாடு

பேரிடா் தகவல்களைத் தெரிவிக்க தனி கட்செவி அஞ்சல்

பேரிடா் தகவல்களை அரசுக்கு பொதுமக்களே தெரிவிக்க தனி கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ் அப்) உருவாக்கப்பட்டுள்ளது.

DIN

பேரிடா் தகவல்களை அரசுக்கு பொதுமக்களே தெரிவிக்க தனி கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ் அப்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடா்கள் குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART என்ற செயலி மூலமும், TWITTER, FACEBOOK உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

அதேசமயம், பேரிடா்கள், விபத்துகளைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களே தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பவும் தனி கட்செவி அஞ்சல் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 94458 69848 என்ற எண்ணில் பேரிடா் குறித்த தகவல்களை பொது மக்களே தெரிவிக்கலாம் என்று அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT