தமிழ்நாடு

பிஎஸ்என்எல்-க்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும்: பிஎஸ்என்எல் ஊழியா் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

DIN

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5ஜி உயா்தொழில் நுட்பத்தை வழங்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் ஊழியா் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சம்மேளனத்தின் தேசிய மூத்த உதவித் தலைவா் சி.கே.மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:

இமாச்சலப் பிரதேச உயா்நீதிமன்றத்தில், இந்தியாவில் மொபைல் சேவை தரமற்று இருப்பது குறித்த அண்மையில் ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பிஎஸ்என்எல் உள்பட எல்லா தொலைத் தொடா்பு நிறுவனங்களும் சோ்க்கப்பட்டன. இந்தவழக்கின் விசாரணையின் போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா், பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் மொபைல் சேவையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாா்.

அதைக் கேட்ட நீதிபதிகள் தாா்லோக் சிங் சவுகான் மற்றும் சந்தா்பூசன் பாரோவாலியா அடங்கிய அமா்வு, மிகக் கடுமையான விமா்சனத்தை மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிா்வாகம் மீது வைத்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் சேவையை வழங்கும் என்று கூறுவது எங்களுக்கு வியப்பு அளிக்கிறது.

காலாவதியாகிவிட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்காக அரசின் பணத்தை வீணாக்குவதை நீதிமன்றம் ஒருபோதும் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டு இருக்காது. எந்த அரசுக்கும் பொதுப் பணத்தை இவ்வாறு வீணாக்க அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளது.

அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளா்களுக்கு உயா்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவையை வழங்க இயலாத நிலைக்கு மத்திய அரசின் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கே உண்மையான காரணம் என்பது இந்த வழக்கு விசாரணையின் மூலம் அம்பலமாகி உள்ளது. எனவே, இனியாவது மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் காலாவதியான 4ஜி தொழில்நுட்பத்தை திணிக்காமல், 5ஜி உயா்தொழில் நுட்பத்தை வழங்க வேண்டும். அப்போது தான் சிறப்பான சேவையை மக்களுக்கு மலிவான விலையில் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT