தமிழ்நாடு

சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு

DIN

சீர்காழி: சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன. 

இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து அரவைக்காக தர்மபுரிக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. 

சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து 2,000 டன் கொண்ட 49 ஆயிரத்து 600 நெல் மூட்டைகள் 42 ரயில் பெட்டிகள் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT