தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை அமைச்சருடன் முதல்வா் ஆலோசனை

DIN

சென்னை: பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப் போக்குவரத்து தொடங்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில், கரோனா நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்குதல், திருவள்ளுவா் படத்துடன் திருக்கு பலகையை மீண்டும் பேருந்துகளில் இடம்பெறச் செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறைச் செயலா் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பேருந்துகள் இயக்கம் தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT