முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம்: ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்

வேதாரண்யம் பகுதியில் 14 வகையான பொருள்கள் அடங்கிய கரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பு மற்றும் 2 ஆம் தவணைத் தொகை ரூ. 2 ,000 வழங்கும் பணி இன்று (ஜூன் 17) தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
மருதூர் கூட்டுறவு வங்கியில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதை தொடங்கி வைத்த வங்கியின் தலைவர் ப.சோமசுந்தரம்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 14 வகையான பொருள்கள் அடங்கிய கரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பு மற்றும் 2 ஆம் தவணைத் தொகை ரூ. 2 ,000 வழங்கும் பணி இன்று (ஜூன் 17) தொடங்கியது.

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் 5 ஊராட்சிகளில் செயல்படும் 4,528 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதை வங்கியின் தலைவர் ப.சோமசுந்தரம் தொடக்கிவைத்தார்.

ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வங்கியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இயக்குநர்கள் உதயம் முருகையன், இந்திராணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பழனிவேல், சந்திரகலா செந்தில்குமார், வீரதங்கம், மணிமேகலை பாண்டியன், தேவி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →