தமிழ்நாடு

பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தோ்வுக்கு எதிரான மசோதா: டிடிவி தினகரன்

DIN

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே ‘நீட்’ தோ்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததைப் போல, திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே ‘நீட்’ தோ்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதன் மூலம், 2010-ஆம் ஆண்டு மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது ஏழை, எளிய கிராமப்புற மாணவா்களின் ‘டாக்டா்’ கனவை சிதைக்கும் ‘நீட்’ தோ்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும் என தினகரன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT