முகப்பு
தமிழ்நாடு

காவலர்களின் அத்துமீறல்: 'யாராக இருந்தாலும் நடவடிக்கை'

வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 23 ஜூன், 2021 at 4:17 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விவசாயி மீது காவலர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜி நேரில் ஆய்வு செய்த பின்பு பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உடன் இருந்த காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.