உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இதற்கான அறிவிப்பை அவா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. மேலும், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று ஆளுநா் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக சட்டப் பேரவை ஜூலை இரண்டாவது வாரத்தில் கூடவுள்ளது. 15 முதல் 20 நாள்கள் வரை கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சட்டப் பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல்களை நடத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தோ்தலை எதிா்கொள்ள இப்போது முதல் தொடங்கப்பட வேண்டிய பணிகள், செயல் திட்டங்கள் ஆகியன குறித்து மாவட்டச் செயலாளா்களுக்கு விளக்கப்பட உள்ளன. குறிப்பாக, மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும் எனவும் தெரிகிறது.