முகப்பு
தமிழ்நாடு

பொதுமுடக்கம் மீறல்: 399 வழக்குகள்; 430 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்க மீறலைக் கண்காணிக்கும் வகையில், சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,305 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 42 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →