தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடவில்லையா உதயநிதி?: திமுக விளக்கம்

DIN

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து திமுக விளக்கமளித்துள்ளது.  

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டன.

அதன்படி திமுகவில் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அல்லது நெல்லையில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதேசமயம் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மறுப்பும் பரவத் துவங்கியது.     

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து திமுக விளக்கமளித்துள்ளது.  

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவைச் சேர்ந்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கே.என்.நேரு இருவரும் கூட்டாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது காங்கிரசுடனான தொகுதிப்பங்கீடு குறித்த கேள்விக்கு, ‘இன்னும் 2 அல்லது 3ம் கட்ட பேச்சுவார்த்தைகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்; பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும்’ என்று தெரிவித்தனர்.

அதேசமயம் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்த கேள்விக்கு, ‘உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது’ என்று விளக்கமளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT