சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை காலை (மார்ச் 7) குமரி மாவட்டத்துக்கு வந்தார்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
''இன்று பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
11 வீடுகளில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலான துண்டறிக்கைகளை விநியோகிக்கிறேன்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணனை நீங்கள் மக்களவைக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்'' என்றார் அவர்.