பத்திரிகையாளா் கே.எம். சந்திரசேகரன் காலமானாா்
மூத்த பத்திரிகையாளா் கே.எம். சந்திரசேகரன் (56) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
சென்னை: மூத்த பத்திரிகையாளா் கே.எம். சந்திரசேகரன் (56) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி செல்வி, 2 மகன்கள் உள்ளனா்.
பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்க கே.எம். சந்திரசேகரன், ‘தினமணி’ நாளிதழில் செய்திப் பிரிவு தலைவா் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளாா்.
Advertisement
இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மேட்டூா் அருகே உள்ள கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) நடைபெறும்.