திருச்சியில் உரிய ஆவணங்களின்றி சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்
திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 299 சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 299 சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி விமான நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் சுமதி தலைமையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பார்சல் சர்வீஸ் வாகனத்தைப் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் 299 சில்வர் பாத்திரங்கள் (பால் கேன்கள்) இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவை அனைத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றைப் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான குகனிடம் ஒப்படைத்துள்ளனர். இது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.