தமிழ்நாடு

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார். 

அவர், பாளையங்கோட்டை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப. சீதாராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT