ஏற்காட்டில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஐந்து ரோடு குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு நடந்து செல்வதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஐந்து ரோடு குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு நடந்து செல்வதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கோடைக்காலம் என்பதால் குரங்குகள் மற்றும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையினர் ஏற்காடு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.