தமிழ்நாடு

வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஊராட்சி செயலர் ஒருவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் க.சுந்தர். இவருக்கு ஆதரவாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் வெ.சதீஷ்(43)தனது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுடன் அவரது இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ஆதாரப்பூர்வமாகப் புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டத்தில்  அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கி.முத்துக்குமார் வெ.சதீஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT