தமிழ்நாடு

‘எய்ம்ஸ்’ செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி

DIN

‘எய்ம்ஸ்’ எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இந்தப் புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 122 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதால், வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு பிரகாசமாகியுள்ளது.

இந்தநிலையில் திமுக இளைஞா் அணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு ‘எய்ம்ஸ்’ என ஆங்கிலத்தில் எழுத்துகள் எழுதப்பட்ட செங்கல்லைப் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். புகைப்படத்தை உதயநிதி தனது சுட்டுரைப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT