FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மே 5 வணிகர் நாளில் கடையடைப்பு வேண்டாம்: வணிகர் சங்க பேரமைப்பு

ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 3 மே 2021, 3:18 pm IST
மே 5 வணிகர் நாளில் கடையடைப்பு வேண்டாம்: வணிகர் சங்க பேரமைப்பு
பகிர்:


சென்னை: ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மே 5, புதன்கிழமை காலை 9 மணியளவில் சென்னை கே.கே. நகர் ராமசாமி தெருவில் உள்ள பேரமைப்புக்குச் சொந்தமான வளாகத்தில் சென்னை மண்டலத்தலைவர் கே. ஜோதிலிங்கம் தலைமையில் வணிகக் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன.

ஆண்டு தோறும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், வணிகர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும், கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல், மாலையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டுதல்களுடன், உரிய கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments