தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது.
நேற்றிலிருந்து வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மதிக்காமல் சீர்காழி நகர்ப் பகுதியில் இயல்பான நிலை காணப்படுகிறது. பொதுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தும் அதிகளவு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வலம் வருகின்றனர்.
இதனால் கூட்டம் நிறைந்த சீர்காழி நகர்ப் பகுதியாகவே காட்சி அளிக்கிறது. உடனடியாக காவல்துறையினர் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோரைத் தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.