மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்கு 30% மானியம்: தமிழக அரசு
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவிகித மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவிகித மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதன்படி முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மூலதன சலுகையைப் பெற ஆக்ஸ்ட் 15-ம் தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.