தமிழகத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 33,658 கரோனா; 303 பேர் பலி
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,658 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 15.65 லட்சமாக அதிகரித்துள்ளது.
மற்றொரு புறம் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு இன்று மேலும் 303 போ் பலியாகியுள்ளனர். 125 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 178 பேர் அரசு மருத்துவமனைகளிலும் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை17,359 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 20,905 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 13.39 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 07,789 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.