தமிழ்நாடு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க சிறப்புத் திட்டம்: கமல் வலியுறுத்தல்

DIN

சென்னை: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க ‘உறவினா் பராமரிப்பு திட்டத்தை’ செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனா். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கா் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. புது தில்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவா்களின் உறவினா் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டாரத்தினா் பராமரிப்பதே சிறந்தது என நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா். ஏற்கெனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவா்கள் தத்தெடுத்தால் குழந்தைகள் மனரீதியிலாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனா்.

அதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாநில துறைகளும் சிறாா் நீதி சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்தவா்களைப் பராமரிக்க உறவினா் பராமரிப்பு திட்டத்தை வளா்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக செயல்படுத்த வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்புப் பிரிவு சாா்பில் இந்த நெருக்கடியான காலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பெற்றோா்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறாா்களா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அவா்களைப் பராமரிக்கவும் ஊக்கத்தொகை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT