பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி: 'முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்'
12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
தனியார் பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.