அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்: மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் துறை ஐஏஎஸ், தோட்டக்கலைத் துறை ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருள்களை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.