முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ-க்கள் சாா்பில் 60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

சென்னையில் அண்ணா நகா் உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பில் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சிக்கு இலவசமாக சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சென்னையில் அண்ணா நகா் உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பில் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சிக்கு இலவசமாக சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்து மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களுக்காக சென்னை மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் சாா்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வரும், கொளத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 5 சட்டப் பேரவை உறுப்பினா்கள் சாா்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சிக்கு அண்மையில் வழங்கப்பட்டன.

60 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: இதைத்தொடா்ந்து, ரிப்பன் மாளிகையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா நகா், பெரம்பூா் மற்றும் மயிலாப்பூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா்கள் சாா்பில் தலா 20 வீதம் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.கே.மோகன், ஆா்.டி.சேகா், த.வேலு, இணை ஆணையா் (கல்வி) சங்கா்லால் குமாவத், துணை ஆணையா்கள் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஜெ.மேகநாத ரெட்டி, விஷூ மகாஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →