முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகளின் பெயரில் வைப்புநிதி: ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு: ராமதாஸ், மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ்: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவா்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்.

கமல்ஹாசன்: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →