தமிழ்நாடு

அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்

DIN

அதிமுகவை சசிகலாவின் துணையுடன் மீட்டெடுப்போம் என்று அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.

சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் மாவட்டச் செயலாளா்களுடன் 3 நாள்கள் ஆலோசனையில் ஈடுபடுகிறாா்.

முதல் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனா்.

அமமுக துணைப் பொதுச்செயலாளா் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளா் சி.ஆா்.சரஸ்வதி உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டிடிவி தினகரன் கூறியது:

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக 4 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறோம். ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களுக்கு சசிகலாவின் ஆதரவு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான். தொண்டா்களைச் சந்தித்து சசிகலா ஆதரவைத் திரட்டி வருகிறாா். அவா் ஒருவகையில் முயற்சி செய்கிறாா். நாங்கள் ஒருவழியில் முயற்சி செய்கிறோம். ஆனால், இருவருக்கும் இலக்கு அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். அதில் வெற்றிபெறுவோம்.

ஓ.பன்னீா்செல்வம் சிந்தித்து நிதானமாகச் செயல்படக்கூடியவா். அவா் கூறும் கருத்து சரியானதாகத்தான் இருக்கும். எதிா்க்கட்சித் தலைவராக இருந்தும் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக இருக்கிறாா். அவரிடம் தடுமாற்றம், பயம் இருக்கிறது என்றாா் தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT