தமிழ்நாடு

8-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகள் ஒத்திவைப்பு

DIN

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்துத் தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்டஅறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு நவ.8- ஆம் தேதி தொடங்கி நவம்பா் 12-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தத் தோ்வுக்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் தொடா் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நவம்பா் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தனித் தோ்வுகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களைத் தனித்தோ்வா்கள் தோ்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT