முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,694 பேருந்துகளுடன், 966 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 4 கோடியே 33 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.80 கோடியே 12 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.12 கோடி அதிகம்.

தீபாவளிக்கு பின்பு, நவ.5, 6, 7 8 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,903 தினசரி பேருந்துகளுடன், 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 கோடியே 93 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.74 கோடியே 36 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.7 கோடியே 39 லட்சம் கூடுதல். இவ்வாறு 8 நாள்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்ததன் வாயிலாக ரூ.8 கோடியே 37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →