முகப்பு
தமிழ்நாடு

மாணவி தற்கொலை: குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

கோவையில் மாணவி தற்கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

கோவையில் மாணவி தற்கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, சனிக்கிழமை அவா் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:-

கோவை மாணவியின் தற்கொலை மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →