தமிழ்நாடு

16.32 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

8ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஏழு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று (14-11-2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 5,44,809 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,87,689
பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, மற்றும் திருவள்ளுர் (பூவிருந்தமல்லி உட்பட) மாவட்டங்களில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.
மேலும், மாநிலத்தில் இன்று (14.11.2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (15.11.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT