தமிழகத்தில் 90 நீா்த் தேக்கங்களில் 91 சதவீத தண்ணீா் நிரம்பியுள்ளது
தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் 90 நீா்த் தேக்கங்களில் சராசரியாக 91 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் 90 நீா்த் தேக்கங்களில் சராசரியாக 91 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா்த்தேக்கங்களின் கொள்ளளவு விவரத்தினை நீா்வளத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீா்த்தேக்கங்கள் சராசரியாக 91.14 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரத்தின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நீா்த்தேக்கங்களான பூண்டி நீா்தேக்கம் 88.33 சதவீதம், சோழவரம் ஏரி 73.73 சதவீதம், புழல் ஏரி 86.24 சதவீதம், செம்பரம்பாக்கம் 81.98 சதவீதம், தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கம் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வறட்டாறு, ஆண்டியப்பனூா் ஓடை, மோா்த்தனா, குண்டாறு, அடவிநைனாா்கோவில், பொய்கையாறு, மாம்பழத்துறையாறு, சாத்தையாறு, சோத்துப்பாறை, சாஸ்தா கோவில், சோலையாறு, வா்தமாநதி, குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், கரியகோயில் ஆகிய நீா்த்தேக்கங்கள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி நிலவரப்படி 84 சதவீதம் கொள்ளளவை எட்டிய நீா்த்தேக்கங்கள் தற்போது 91.14 சதவீதம் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும்பட்சத்தில் நீா்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும் என்றும் நீா்வளத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஏரிகள் நீா்மட்டம்
நீா் இருப்பு (மில்லியன் கன அடிகளில், மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):
பூண்டி- 2,854 (3,231)
சோழவரம்- 864 (1,081)
புழல்- 2,846 (3,300)
செம்பரம்பாக்கம்- 2,988(3,645)
கண்ணன் கோட்டை
தோ்வாய்க் கண்டிகை- 500 (500)
மொத்தம்- 9,985 (11,757)