தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் நாளை (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை மதியம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5.45 மணி நிலவரம்: இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6.00 மணி நிலவரம்: கனமழை காரணமாக செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
6.30 மணி நிலவரம்: இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6.45 மணி நிலவரம்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6.50 மணி நிலவரம்: தருமபுரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7.05 மணி நிலவரம்: கனமழை காரணமாக கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.
7.20 மணி நிலவரம்: இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8.00 மணி நிலவரம்: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8.05 மணி நிலவரம்: இதேபோல் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8.55 மணி நிலவரம்: அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
9.30 மணி நிலவரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.