தமிழ்நாடு

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

DIN

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. வீடூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு, ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதால், சங்கராபரணி ஆறு நிரம்பி வழிந்த நிலையில் தண்ணீர் செல்கிறது. 

வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடும் வெள்ளம்.

இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர்-திருக்காஞ்சி பாலம் வழியாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு, போக்குவரத்தை துண்டித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT