சென்னையில் நாளை மறுநாள் (நவ.25) மின்தடை ஏற்படும் பகுதிகள்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.25) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.25) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
நவம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி 5 ஆக உயர்வு
Advertisement
Advertisement
அதன்படி சோழிங்கநல்லூரில் தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி, ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, எல்லையம்மன் கோயில் தெரு, ரிங்ரோடு பகுதி, அஞ்சல் அலுவலகம், எம்.சி.என் நகர் விரிவு, ஒ.எம்.ஆர் பகுதி போன்றவற்றில் மின் தடை ஏற்படும்.