தமிழ்நாடு

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு

ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN


ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சரவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது.

இத்திட்டத்திற்க்கென, 2021-22ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1,124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT