மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதையும் படிக்க | சட்டத்தை இயற்றுபவா்கள் அதன் தாக்கங்களை ஆராய்வது அவசியம்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Advertisement
அனையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக 3,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி ஆக இருந்தது.