தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் காந்தியடிகளின் 152 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நேரந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சோனியா மரியாதை: அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் தில்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர், முதல்வர் மரியாதை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில் மும்மத பிரார்த்தனைகள் மற்றும் தேசப்பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.