தமிழ்நாடு

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுப் பணி

DIN

மாணவா்கள் தங்களது பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணியை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2020-21-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை (அக்.4) வழங்கப்பட உள்ளதை அடுத்து அக்.4 முதல் அக்.18-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவா்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில்  பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT