தமிழ்நாடு

திருப்புவனத்தில் போலீசார் விரட்டியதால் தாங்களாகவே வைகை ஆற்றுக்குள் தர்ப்பணம் செய்த மக்கள்!

DIN

மானாமதுரை: மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களாகவே தர்ப்பண பூஜை செய்து வீடு திரும்பினர். 

திருப்புவனத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு மேற்கண்ட காரியங்களை செய்தால் காசியில் செய்ததற்கு இணையானது என நம்பப்படுகிறது. இதனால் தினமும் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திருப்புவனம் வைகையாற்றில் கூடுவார்கள். 

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட  இடத்துக்கு வரும் வழியில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். தடுப்புகளை மீறி இந்த இடத்துக்கு வந்தவர்களை போலீசார் விரட்டினர். இதனால் தர்ப்பணம், திதி கொடுக்க வந்த மக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்கி அவர்களாகவே எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர். 

வழக்கமாக திருப்புவனம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் கிரிகை,திதி செய்வதற்கான வேத விற்பன்னர்கள் யாரும் அங்கு காணப்படவில்லை. மானாமதுரை பகுதியில் மக்கள் அவர்களாகவே வைகையாறு உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT