தமிழ்நாடு

ரத்தாகும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: புதிய இட ஒதுக்கீடு ரத்து!

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை மாநில தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம்(செப்.22) அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை ரத்து செய்து, இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைந்து, சட்ட விதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும். இதனால் அறிவித்த தேர்தலை ரத்து செய்து, ஒரு வாரத்துக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து புதன்கிழமை ஆலோசனை நடத்திய புதுச்சேரி அரசு, அண்மையில் அறிவிக்கப்பட்ட தேர்தலுக்காக கடந்த 2019 ஆம் வெளியிட்ட உள்ளாட்சி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, புதன்கிழமை அரசாணை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில தேர்தல் துறை, அண்மையில் புதியதாக அறிவித்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், 2019 இல் வார்டு இட ஒதுக்கீடு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால், புதுச்சேரியில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை மாநில தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT