பல்லடம்: உ.பி. வன்முறை சம்பவத்தைக் கண்டித்து பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அமைப்பு ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வட்டார தலைவர் வேலுமணி, நகரத்தலைவர் மைனர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.