முகப்பு
தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் பாபு வழங்கினார்.
பகிர்:

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
சார்பில், திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது.  

வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் தாமரை செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.