தமிழ்நாடு

மானாமதுரையில் நவராத்திரி விழா: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான புதன்கிழமை இரவு உற்சவர் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்கு உள்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் சன்னதி முன் மண்டபம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்து ஜொலிக்கிறது. 

தினமும் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஒவ்வொருநாளும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

அதன்படி, நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான புதன்கிழமை இரவு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

அதைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் கோயிலுக்கு வந்து ஆனந்தவல்லி அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT