தமிழ்நாடு

மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஏ.உதயன் நியமனம்

DIN

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஏ.உதயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் பதவிக் காலம் கடந்த செப்டம்பா் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூவுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போது, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஏ. உதயன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ சனிக்கிழமை பிறப்பித்தாா். உதயன் 1991-ஆம் ஆண்டு இந்திய வனப்பணியைச் சோ்ந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT